November 23, 2009

பகவத்கீதை உணர்த்தும் தான வகைகள்


கைம்மா றென்றும் செய்யாதார்க்கும்
காலத்தால் செயும் தானமெல்லாம்
தக்க இடத்தில் தக்கார்க்(கு) ஈந்தால்
ஸாத்விக தானம் எனப்படுமே.

கைம்மா(று) ஒன்றே கருத்திற் கொன்டு
பலனை நாடிய தானமெல்லாம்
தூய மனத்தால் செய்யாமையினால்
ராஜஸ தானம் எனப்படுமே.

தக்கார்க்(கு) அல்லால் ஈயும் தானம்
தகாத இடத்தில், காலத்தால்
பணிவே இன்றி இழிவாய்ச் செய்யின்
அதுவே தாமஸ தானமுமாம்.
-அத்(17),ஸ்லோகம்(20-22)

No comments: