November 19, 2009

பகவத் கீதை - ஸ்லோகங்கள்






1. எனக்காய் செயல் புரிவோனும்
பக்தியோடு என்னைப் பணிவோனும்
உலகில் பற்றோ வெறுப்போ இன்றி
வாழும் அன்பன் எனை அடைவான்.
- அத் (11,55)

2. எல்லா உயிரிலும் சமமாயுள்ளேன்
நண்பன் வைரி எனக்கில்லை
எனினும் என்னை அன்பால் அடைவோர்
என்னுள் அவர். அவரில் யான்.
- அத் (9,29)

3. ஸாமங்களிலே பிருஹத் ஸாமம் யான்
சந்தங்களில் யான் காயத்ரி
மாதங்களில் மார்கழி யானே
ருதுக்களிலே யான் வசந்தம்தான்.
- அத்(10,35)

4. யாருள் உயிர்கள் நிலை பெற்றிடுமோ
யாரால் யாவும் நிறைவுறுமோ
பரம்பொருளாகிய அப் பரமாத்மா
அனன்ய பக்திக்கு அகப்படுவான்.
-அத்(8,22)
5. நீரில் சுவையும் வானில் ஒலியும்
மதியில் ரவியில் ஒளியும் யான்-
வேதம் அனைத்திலும் ஒங்காரம் யான்
மாந்தரில் ஆண்மை யானேதான்.
-அத்(7,8)

6. நேயர், நண்பர், பகைவர், இதரர்
நடுவர், வெறுப்போர், பந்துக்கள்
ஸாத்விகர், பாவியர் என்பாரிடமும்
சமமதி உடையோன் மேலோனாம்.
-அத்(6,9)

7. தன்னைவென்று மனத் தெளிவுற்றோன்
குளிர் வெப்பச் சுக துக்கத்தில்
புகழொடு வசையில் சமநிலையுற்றோன்
பரமாத் மாவின் அருளுற்றான்.
-அத்(6,7)

8. தவத்தொடு யாகம் துய்ப்போன் யானே
உலகுக் கெல்லாம் ஈசுவரனே
எல்லா உயிர்க்கும் தோழன் நானே
என அறிவோனே சாந்தியுளான்.
-அத்(5,29)

9. தீமை இல்லாச் சொல்லொடு ஸத்தியம்
இனிமை நலனும் பயக்கும் சொல்
வேதம் ஓதல் நாம ஜபங்கள்
யாவும் வாக்குத் தவமாகும்.
-அத்(17,15)

10. வானவர் அந்தணர் குருக்கள் ஞானியர்
யாவரிடத்திலும் பணிவன்பு,
தூய்மை, நேர்மை, புலன்மேல் ஆட்சி
அஹிம்சை யாவும் உடல் தவமாகும்.
-அத்(17,14)

No comments: