November 20, 2009

சிறந்த வழிபாடு எது?


ஒரு முறை பார்வதி தேவி சிவபெருமானிடம் எந்த வழிபாடு முறை சிறந்தது என்று கேட்டார். அவர் "விஷ்ணோர் ஆராதனம் பரம்", "மிகச் சிறந்த வழிபாடு விஷ்ணுவை வழிபடுவதே" என்றார்.

எத்தனையோ தேவதைகள் இருக்கிறார்கள் ஆனால் அவர் விஷ்ணு பூஜை சிறந்தது என்று பரிந்துரைத்தார். விஷ்ணுவின் பக்தரை வழிபடுவதும் சிறந்தது.

விஷ்ணுவின் சேவகர்களை அல்லது விஷ்ணுவோடு சம்பந்தபட்டவர்களை வணங்குவது... உதாரணமாக துளசி செடியை வணங்கலாம்.

நாம் எல்லா செடியையும் பூஜிப்பதில்லை. ஆனால் துளசி கிருஷ்ணரோடு தொடர்புள்ளவராகையால் அவளை பூஜிக்கிறோம்.

அதுபோலவே கிருஷ்ணரோடு மிக நெருங்கிய தொடர்புள்ள எதுவானாலும் அதை பூஜிப்பது நல்லது. எனென்றால் கிருஷ்ணரை அது மகிழ்விக்கும். (From the book "Perfect questions and Perfect answers")

No comments: