January 18, 2010

ஸ்ரீ கிருஷ்ண கவசம்

ஸ்ரீ கிருஷ்ண கவசம் - சில வரிகள்

உன்னால் தானே உலக இயக்கம்
கண்ணனில் லாமல் கடல்வான் ஏது
கண்ணனில் லாமல் கடவுளு மில்லை
கண்ணனில் லாமல் கவிதையு மில்லை
கண்ணனில் லாமல் காலமு மில்லை

எத்தனை பிறவி எத்தனை பிறவி
அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால்
சத்திய நாதன் தாள்களை மறவேன்
தத்துவ கண்ணன் தனிமுகம் மறவேன்

உன்னை நம்பி உன்னையே சேர்ந்தால்
பிறவிக ளிலைநீ பேசிய பேச்சு
உலகில் போதும் ஒருமுறை மூச்சு
உன்னிடன் சேர்த்து உன் வடிவாக்கு...
......
ஜெய ஜெய ராமா ஜெய ஜெய கிருஷ்ணா..

- கண்ணதாசன்

January 16, 2010

ஸ்ரீ கிருஷ்ண மணிமாலை

ஸ்ரீ கிருஷ்ண மணிமாலை - சில வரிகள்..

மந்திரமும் தந்திரமும்
கொண்டதொரு தெய்வம்
சிந்தனையில் வந்துதவும்
தேனமுதச் செல்வம்
அந்தியிலும் சந்தியிலும்
காவல் தரும் முகமே
இந்திரனும் போற்றுவது
என்ஹரியின் பதமே..
- kannadasan

January 7, 2010

ஆண்டாளின் கிளி

ஆண்டாளின் கரத்தில் அமர்ந்துள்ள கிளி 'சுகப்பிரம்மர்' ஆவார். ரங்க நாதரிடம் அவரை ஆண்டாள் கிளி ரூபத்தில் தூது அனுப்பினாளாம் ஆண்டாள். தூது சென்று வந்த அவரிடம் 'உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று கேட்க, இதே கிளி ரூபத்தில் உங்கள் கரத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்றாராம். அவர் விரும்பியபடி ஆசிர்வதித்தாராம் ஆண்டாள்.