March 29, 2010

பக்தனுக்கு காட்சி கொடுத்த இறைவன்.

துருவன் ஐந்து வயது பாலகனாய் இருந்தபோது தனது சிற்றன்னையால் அவமதிக்கப்படுகிறான். அதனால் ஏற்பட்ட மனவருத்தத்தை தன் தாயிடம் சொல்கிறான். அவனது தாயார் மனிதர்களுக்கு அவரவர் கர்மத்தின் பலனைக் கடப்பதற்கு கிருஷ்ணருடைய திருவடிகளை சரணடைய வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.

தாயாரின் அறிவுரையைக் கேட்டபின் வனத்திற்கு சென்று தவம் செய்ய நினைக்கிறான். வழியில் நாரதர் அவனைக் கண்டு மந்திர மார்க்கத்தை உபதேசிக்கிறார்.
மந்திரம் "ஓம் நமோ பகவதே வாசுதேவாய".

துருவன் இறைவனிடம் மனதை அர்ப்பணம் செய்து ஐந்து மாதம் கடுமையான தவம் செய்கிறான். அவனுடைய தவத்தின் வலிமையைப் பார்த்து ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவனிடம் கருணை கொண்டு ஞானானந்த ஸ்வரூபத்தில் லயித்திருந்த துருவனின் முன்னிலையில் கருடாரூரராகக் காட்சியளித்தார். அவனுடைய கன்னப் பிரதேசத்தில் சங்கத்தால்(பாஞ்ச சன்னியம்) அன்புடனும் , ஆதரவுடனும் தொட்டருளினார்.

ஞானோதயத்தால் மாசற்று விளங்கிய துருவனிடம் "நீண்ட காலம் அரசாட்சியை அனுபவித்து அனைத்திற்கும் மேலானதும், திரும்பிவருதலில்லாததுமான துருவபதத்தை அடைவாயாக" என்று ஆசி கூறினார்.


துருவனின் தந்தை ஆட்சிக்கு பிறகு வனம் செல்ல, இறைவனின் ஆசிகளின்படி துருவன் நீண்ட காலம் நல்லாட்சி செய்தான்.

No comments: