December 21, 2009

கீத கோவிந்தம் - ஜெய தேவர்



ஜெய தேவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பரம பக்தர்.
ஜெய தேவர் கீத கோவிந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கிறார்.

ராதை ஊஞ்சலில் ஆடி கொண்டிருக்கிறாள். கண்ணன் எதிரே வருவதை அவள் கவனிக்கவில்லை. ஊஞ்சலில் தன்னை மறந்த நிலையில் கால்களை நீட்டி அமர்ந்து வீசி ஆடுகையில் எதிரே வந்த கிருஷ்ணரின் சிரசின் மீது அவள் பாதங்கள் படுகின்றன. அந்த ஸ்பரிஸத்தால் பகவான் பூரித்து போகிறார்.

இந்த கருத்துபட 'தவ பத கமல - மம ஸிரஸி மண்டல' என்ற வரிகளை எழுதுகிறார். எழுதிய வரிகளை படித்து பார்க்கும்பொழுது " எத்தனை பெரிய தவறு.. ராதையின் பாதங்கள் பகவான் சிரஸில் படுவதாக எழுதியது. எத்தனை அறிவீனம்" என்று எண்ணி ஏடுகளை கிழித்துவிட்டு ஸ்னானம் செய்ய செல்கிறார்.

அவர் வெளியே சென்றதும் பகவான் கிருஷ்ணரே ஜெயதேவர் வடிவில் வந்து புதிய ஏட்டை எடுத்து 'தவ பத கமல - மம ஸிரஸி மண்டல' என்று அதே வரிகளை எழுதிவிட்டு செல்கிறார். பிரேமையின் வடிவமான ராதையின் பாதங்களின் பெருமை கண்ணனுக்கல்லவா தெரியும்.

வீட்டிற்கு வந்த ஜெயதேவர் ஏட்டை பார்த்து அதிசயிக்கிறார். பகவான் கிருஷ்ணனே வந்து கீத கோவிந்த வரிகளை எழுதிவிட்டு சென்றதை அறிந்து அந்த கருணைக்கடலை மேலும் பல வரிகளால் பாடி மகிழ்கிறார்.

எல்லையே இல்லாத தூய பக்திக்கு எத்தனை மதிப்பு தருகிறான் இறைவன். தன்னை தாழ்த்திக்கொன்டு தன் அடியவர்களின் பெருமையை உயர்த்தும் அவன் பெருமையை என்னென்பது. - (டி.எஸ். நாராயண ஸ்வாமி உரையிலிருந்து)

No comments: