
ஸ்ரீ மேல்புத்தூர் நாராயண பட்டதிரி என்ற நம்பூதிரி பிராமணர் பாரதபுழை என்ற நதியின் வடகரையில் திருநாவா என்ற ஷேத்திரத்திற்கு சமீபத்தில் பிறந்தார். இவரது தந்தை மாத்ருதத்தர் என்ற மகா பண்டிதர். பட்டத்திரி சிறுவயதில் தந்தையிடமே கல்வி பயின்றார்.
ஒருசமயம் அவருடைய வியாகரண குருவான அச்யுத பிஷாரடி வாத நோயால் பீடிக்கப்பட்டு வருந்தியபோழுது பட்டதிரி அவருக்கு சேவை புரிந்தார். அவருடைய நோயையும் யோகபலத்தால் தானே ஏற்றுக்கொண்டு அங்கங்கள் முடங்கியவரானார்.
குருவாயூரில்போய் தவம்புரிய நிச்சயித்து தன்னை அங்கு எடுத்து போகச் செய்து நாள்தோறும் பத்து சுலோகம் பாடலானார்.நூறு நாட்களில் பாடிமுடித்தபொழுது பகவான் ஸ்ரீகிருஷ்ணருடைய திருவருளால் நோயிலிருந்து விடுபட்டார்.
(நாராயண பட்டதிரி எழுதிய "ஸ்ரீமந் நாராயணீயம்" ஸ்ரீமத் பாகவதத்தை 1036 சுலோகங்களில் சுருக்கி வருணிக்கிறது)