Showing posts with label பங்குனி உத்திரத் திருநாளில் ஓர் தெய்வீகத் திருமணம்.. Show all posts
Showing posts with label பங்குனி உத்திரத் திருநாளில் ஓர் தெய்வீகத் திருமணம்.. Show all posts

March 25, 2010

பங்குனி உத்திரத் திருநாளில் ஓர் தெய்வீகத் திருமணம்.


ராமாயணத்தில் பங்குனி மாதம் இரண்டு வகைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று, ஸ்ரீராமர் அவதரித்தது பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில்.. மற்றொன்று ஸ்ரீராமர், சீதையின் தெய்வீகத் திருமணம் நடைபெற்றது பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில்..

அதே புனித நன்னாளில்தான் ,ஸ்ரீராம பிரானின் சகோதரர்களாகிய லக்ஷ்மணர், பரதன், சத்ருக்கனருக்கும் சீதாதேவியாரின் ககோதரிகளுக்கும் திருமணம் நடைபெற்றது..

ஸ்ரீராமரின் தெய்வீகத் திருமணம் நடைபெற்ற நன்னாளில் ஸ்ரீராமரை வணங்கி அவரது திருவருளைப் பெறுவோம்.