
"பலனுக்கு ஆசைப்பட்டு செயல்படாதே. விளைவுக்கு பயந்து செயல்படாமலும் இருந்து விடாதே. எது நீ செய்ய வேண்டிய கடமையோ அதனை சிந்தையில் குழப்பமின்றி செய்.
உன்னைச் சேர வேண்டிய பலன் உன்னை வந்து சேரும். அப்படி பலன் கிடைத்தபோதிலும் அதனால் நீ பாதிப்புக்குள்ளாகிவிடாதே. ஏனெனில் உன்னை ஒரு கருவியாக வைத்து யாமே செய்கிறோம்.
எவன் ஒருவன் தன்னை ஒரு கருவியாக மட்டுமே பாவித்துக்கொன்டு செய்ய வேண்டிய கடமையை சஞ்சலமின்றி செய்கிறானோ அவன் பாவ புன்னிய தளைகளிலிருந்து விடுபடுகிறான்.
அந்த ஸ்திதப்ரக்ஞன்(நிலை மனதினன்) புனரபி ஜனனம், புனரபி மரணம்(மீண்டும் பிறப்பு, மீண்டும் இறப்பு) என்ற சுழற்சியிலிருந்து விடுபட்டு என்னை அடைகிறான்".