Showing posts with label பகவத் கீதை - எல்லா மதத்தினருக்கும். Show all posts
Showing posts with label பகவத் கீதை - எல்லா மதத்தினருக்கும். Show all posts

March 30, 2010

பகவத் கீதை - எல்லா மதத்தினருக்கும்

பகவத் கீதையில் எல்லா மதத்தினரும் பின்பற்றக் கூடிய நிறைய கருத்துக்கள் இருக்கின்றன.

ஒருவர் எவ்விதமான உணவை உட்கொண்டால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என்று 17 வது அத்யாயத்தில் சொல்லப்பட்டுள்ளது.

"ஆயுள், ஸத்துவம், சக்தி, சுகமும்
குன்றா நலனும் உடல் வலிவும்
இன்மை, கனிவு, இவற்றை நல்கும்
உணவே ஸாத்விகர் நாடுவதாம்"
- கீதை(17,8)

மேலும் கசப்பு, புளிப்பு, காரம் மிகுதியாக சேர்க்கப்பட்ட உணவு ராஜச குணத்தை தரக்கூடியதாகும் என்று அத்(17,9) ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

மிகையாக உண்பவரும், உணவே இல்லாமல் இருப்பவரும், தூக்கமும், விழிப்பும் மிகுதியாக உள்ளவர்களும் யோகம் தனை எய்தார் என்று அத்(6,16) வது ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

"அளவாய் உண்டு உடலைப் பேணி
கர்மம் சீராய்ச் செய்திடுவோன்
தூக்கம் விழிப்பு மிதமாய் உள்ளோன்
செய்யும் கர்மம் துயர் நீக்கும்".
-அத்(6,17)


இதனால்.,
மிதமான விழிப்பு, மிதமான தூக்கம்,
மிதமான உரைப்பு, புளிப்பு, கசப்பு சேர்ந்த உணவு
இவையே மனதுக்கும், உடலுக்கும் ஆரோக்கியம் தந்திடும் என்று நாம் கீதையிலிருந்து அறிந்து கொள்ளலாம்..